Thursday, May 13, 2021
உணவகங்களில் பரிமாறுபவர்கள் தொடர்பான இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்
அறிமுகம்
வ. வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம’; என்ற சிறுகதையே தமிழில் எழுதப்பட்ட முதலாலது சிறுகதை என்று கூறப்படுகின்றது. இச்;சிறுகதை எழுதப்பட்டு ஏறக்குறைய நூறு வருடங்கள் கடந்து விட்டன. இந்த நூறு வருட காலத்தில் சிறுகதைகளின் கரு, வடிவம் என்பவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஈழத்தைப் பொறுத்தவரையில் இலங்கையர்கோன், சம்பந்தர், வைத்திலிங்கம் என்போர் சிறுகதை மூலவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட ஈழத்து சிறுகதை முயற்சி முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கின்றதென பொதுவாகக் கூறப்படுகின்றது.
; ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் தமிழ்நாட்டு சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளதென்ற கருத்தினை 1960 களில் தமிழ்நாட்டு எழுத்தாளர் பகீதரன் தெரிவித்திருந்தார். இதனை ஒத்ததாக மற்றொரு இந்திய எழுத்தாளரான ஜெயமோகன் 1990 களில் ஈழத்து சிறுகதைகள் தமிழ்நாட்டு சிறுகதைகளை விட பின்தங்கியுள்ளவெனவும் அவை ஒற்றைப் பரிமாணம் கொண்ட தட்டையானவையெனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஈழத்து சிறுகதைகள் சாதி, வர்க்கம், தேசிய இனப்பிரச்சினை போன்ற முக்கியமான விடயங்களையே தமது பிரதான கருப்பொருட்களாக கொண்டந்துள்ளன போதிலும் தனி மன உணர்வுகள், போன்ற நுண்ணிய விடயங்களைக் கருப்பொருளகக் கொண்டமைந்தவை மிகக் குறைவாக உள்ளனவெனக் கருதப்படுகின்றது.
இந்தப் பின்புலத்தில் உணவத்தில் பரிமாறுபவனுக்கும் அங்கு செல்லும் வாடிக்கையாளனுக்குமுள்ள மென்மையான உறவை வைத்து எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். நுண்ணிய விடயங்களை கருப்பொருளாகக் கொள்ளும் இக்கதைகளை ஈழத்தின் பிரதான கதை கதையோட்டத்தில் இருந்து வேறுபட்டனவெனக் குறிப்பிட முடியும்.
உணவகத்தில் பரிமாறும் ஊழியர்கள்
உணவுகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ஊழியர்கள் பெரும்பாலும் நாளொன்றில் அதிகாலை தொடக்கம் இரவு பத்து, பன்னிரண்டு மணிவரை வேலை செய்கிறார்கள். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும் இவர்களுக்கு விடுமுறைகளும் கிடைப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் கூட தமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்காது உணவகங்களிலேயே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு உண்டு. கடை முதலாளிகளின் ஏச்சுக்களையும் திட்டுக்களையும் அடிக்கடி வாங்கும் இவர்களால் கடைக்குவரும் வாடிக்கiயாளரின் முணுமுணுப்புக்களையும்; சகிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான வாடிக்கiயாளர்கள் இந்த ஊழியர்களை மதித்து மரியாதையாக நடத்துவதில்லை. குறைந்தளவு கல்வித் தகுதியை கொண்ட இந்த ஊழியர்களின் மாதச் சம்பளமும் குறைவாகவே உள்ளது. சம்பளத்தை விட வாடிக்கையாளர் விரும்பி வழங்கும் சிறுதொகை வெகுமதியும் சில வேளைகளில் இவர்களுக்கு வருமானமாகக் கிடைக்கின்றது. மற்றைய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிற் சங்கங்கள் இருப்பதைப் போன்று இவர்களுக்கு தொழிற்சங்கங்களும் இல்லையென்றே பொதுவாகக் கூறலாம். கொழும்பு போன்ற நகரங்களில் பெரும்பாலும் மலையகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்களே உணவகங்களில் பரிமாறுபவர்களாக பணிபுரிகின்றனர்.
உணவகங்களில் பரிமாறும் ஊழியர்கள் தொடர்பான இலக்கியப் படைப்புக்கள்
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான புதுமைப் பித்தனின் ‘இது மிஷின் யுகம்’ என்ற சிறுகதை; உணவகத்தில்; பரிமாறும் ஊழியனைப்; பற்றியது. இக்கதையில் பரிமாறுபவன்; ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும் ஒரே மாதிரியாக உணவு வகைகளின் பெயர்களை ஒப்புவிக்கிறான். அவன் இயந்திரமா இல்லை மனிதனா என்ற ஐயம் பிரதான பாத்திரத்திற்கு ஏற்பட, அதனை உறுதி செய்வதற்காக பிரதான பாத்திரம் தனது கைக்குட்டையை நிலத்தில் விழ விடுகின்றது. அதனைக் கண்ட பரிமாறுபவன்“ ஸார், உங்கள் கைக்குட்டை விழுந்து விட்டது, ஸார்”; என்று கூறி அதனை எடுத்துக் கொடுக்க முயல்கிறான். இதனால் பிரதான பாத்திரம் பரிமாறுபவன்; மிஷின் இல்லை என எண்ணுகிறது.
இலங்கையில் உணவகங்களில் பரிமாறும் ஊழியர்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்ட ஈழத்து இலக்கியப் படைப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சத்தியபாரதி பதிப்பகத்தால் 1993 இல் வெளியிடப்பட்ட செ. யோகநாதனின் குறுநாவலான “சிறு பொறி பெருந்தீ,” யாழ்ப்பாணத்திலுள்ள உணவகமொன்றில் பணியாற்றும் சமையல்காரர்களும் பரிமாறுபவர்களும் இணைந்து தமது உரிமைக்காக முதலாளிக்கு எதிராக போராடுவதைப் பற்றியது.
ஈழத்து சிறுகதைகளைப் பொறுத்த வரையில் அ. யேசுராசாவின் ‘ வரவேற்பு’ , அந்தனி ஜீவாவின் ‘ புறூட் சலாட்’ சுதாராஜின் ‘ தயவு செய்து கை போடாதீர்கள்’ , பொ. கருணாகரமூர்த்தியின் ‘ பெயர் தெரியாத மனிதன்”.. போன்றன இந்த வகைக்குள் காணப்படுகின்றன. எனினும் மேலும் இந்த வகைக்குள்; சில சிறுகதைகள் கதைகள் காணப்படக் கூடும்.
அந்தனி ஜீவாவின் புறூட் சலாட் என்ற சிறுகதையானது சிரித்திரனில் வெளியானது. தெளிவத்தை ஜோசபினால் தொகுக்கப்பட்ட “மலையகச் சிறுகதைகள” என்ற தொகுப்பிலும் இச்சிறுகதை உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுகதை உணவகமொன்றில் பரிமாறுபவனாக பணிபுரியும் சிறுவனின் அவலநிலைறைச் சித்தரிக்கின்றது. சுதாராஜின் சிறுகதையானது, உணவகமொன்றில் பரிமாறுபவன் தனது குடும்பத்தினருக்கு வடைகளை கொண்டு செல்வதற்கு பல நாள் நாட்கள் ஆசைப்படுவதையும் பல முயற்சிகளின் பின்னர் முதலாளியிடம் தனக்கு வடை வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டு போகிறான். அந்த வடைகளுக்கான பணம் கடை முதலாளியினால் அவனின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. வாசகர்களை பரிமாறுபவன் மீது அனுதாபம் கொள்ள வைக்கும் இச்சிறுகதை சிரித்திரனில் பிரசுரமானது. சுதாராஜின் முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘கொடுத்;தல் ‘ இலும் இது உள்ளடங்கியுள்ளது.
சில ஈழத்து சிறுகதைகளில் உணவகங்கள்pல் பரிமாறும் ஊழியர்களை பிரதான பாத்திரங்களாக அன்றி துணைப் பாத்திரங்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்;. உதாரணமாக தேவமுகுந்தனின் ‘ஒரு சுதந்திர நாள்..’ என்ற சிறுகதையில் உணவகமொன்றில் பரிமாறுபவர்களைப் பற்றி பிரதான பர்த்திரம் இவ்வாறு எண்ணுகின்றது: “ சங்கர், ரவி, விஜயன், சரவணன் .. என்று லக்ஸ்மி பவனில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை இவனறிவான். இவர்கள்தானே இரண்டு வருடங்களுக்கு மேலாய் இவனுக்கு இரவுணவு பரிமாறுகிறார்கள். வெறும் கடமைக்காய் உணவு பரிமாறாமல் நட்பாய், அன்பாய்ப் பரிமாறும் அவர்களை இவனுக்குப் பிடிக்கும்”.
இவ்வாறு உணவகங்களில் பரிமாறும் ஊழியர்களைப் பற்றிய சில கதைகள் ஈழத்தில் காணப்பட்டாலும் வசதி கருதி இந்தக் கட்டுரையானது உணவகத்தில் பரிமாறும் ஊழியனுக்கும் அங்குவரும் வாடிக்கையாளனுக்கும் இடையிலான பிணைப்புகளை வெளிக்காட்டும ;இரண்டு சிறுகதைகளான
(அ). அ. யேசுராசாவின் ‘வரவேற்பு…’
(ஆ). பொ. கருணாகரமூர்த்தியின் ‘பெயர் தெரியாத மனிதன்’
ஆகியவற்றை மட்டும் ஒப்பிட்டு நோக்க முயல்கின்றது.
இரண்டு சிறுகதைகள்
(அ). அ. யேசுராசாவின் ‘வரவேற்பு…’
ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாளர், சினிமா விமர்சகர், சஞ்சிகை ஆசிரியர்…என பலபரிமாணங்களைக் கொண்டவர் அ. யேசுராசா. இவரின் ‘வரவேற்பு…’என்ற சிறுகதை 1968 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்கதை இவரின் 1974 ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுதியான ‘ தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்.. ‘ இல் இடம் பெற்றுள்ளது. இக்கதை எழுத்தாளர் செ. யோகநாதனால் தொகுத்து வெளியிடப்பட்ட ஈழத்து சிறுகதைகளின் தொகுப்பான ‘ வெள்ளிப் பாதசரம’; தொகுதியிலும் சேர்க்ப்பட்டுள்ளது.
கொழும்பில் தொழில் புரியும் பிரதான பாத்திரம் விடுமுறையில் யாழ்ப்பாணம் வருகிறான். அவன் யாழ்ப்பாணத்திலுள்ள தேநீர்க்கடையொன்றில் தேநீரருந்தச் சென்றபோது முன்பு கொழும்பில் உணவகமொன்றில் பணிபுரிந்த மரியசூசை இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள அந்த உணவகத்தில் பணிபுரிவதைக் காண்கிறான்.
காலையில் இருந்து இரவு பத்துப் பன்னிரண்டு மணி வரை உணவகங்களில் வேலை செய்யும் மனிதர்கள் மீது இயல்பாகவே அனுதாபம் கொண்டுள்ள பிரதான பாத்திரத்திடம் மரியசூசை மரியாதையாக கதைத்து சுகம் விசாரிக்கிறான். பிரதான பாத்திரத்திற்கு உணவு பரிமாறுபவனின் தோற்றத்திலும் பழக்கத்திலும் ஒருவித பிடிப்பு உள்ளது. இருவரும் பரஸ்பரம் உரையாடுகின்றனர். மரியசூசை பிரதான பாத்திரத்தின் ‘பில்’லுக்குரிய பணத்தை செலுத்துகிறான்.
உணவு பரிமாறுபவனுக்கும் வாடிக்கையாளனுக்குமிடையிலான ஒருவித இனம்புரியாத பந்தம் இக்கதையில் வெளிப்படுகின்றது.
(ஆ). பொ. கருணாகரமூரத்தியின் ‘பெயர் தெரியாத மனிதன்’
புலம்பெயர் இலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்க முக்கியமானவராகக் கருதப்படும் பொ. கருணாகரமூர்த்தி. தற்போது ஜேர்மனியில் வசித்துவரும் இவர் சிறுகதைத் தொகுதிகள், குறுநாவல்கள் என்பவற்றை படைத்துள்ளார். இவர் எழுதிய ‘பெயர் தெரியாத மனிதன்’ என்ற சிறுகதை ‘ஞானம்’ நவம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ளது. இவரின் அநேகபடைப்புக்கள் புலம்பெயர் தேசங்களை களமாகக் கொண்டள்ள போதிலும் இக்கதையானது வழமைக்கு மாறாக யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
பிரதான கதாபாத்திரமான இளைஞன், தான் பத்து வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் வசித்த காலத்தில் உணவகமொன்றில் பரிமாறுபவனாக இருந்த மனிதனை எதிர்பாராத விதமாக யாழ்ப்பாண நகரத்தில் சந்திக்கிறான். அந்த பெயர் தெரியாத மனிதனுக்கு தன்னை அறிமுகம் செய்கிறான். அந்த மனிதனுக்கு பிரதான பாத்திரத்தை ஞாபகம் இல்லை. பெயர் தெரியாத மனிதனுக்கு அவனை நகரிலுள்ள சாப்பாட்டுக்கடையொன்றுக்கு அழைத்துச் சென்று அவனுடன் சேர்ந்து சிற்றுண்டிகள் உண்டு தேநீரும் அருந்துகிறான்.
அனுராதபுரத்தில் வசித்த காலகட்டத்தில் பிரதான கதாபாத்திரம் தனது சாப்பாட்டு கணக்கை குறைத்து எழுதியதை கண்ட பெயர் தெரியாத மனிதன் அதனை திருத்துமாறு கூறியுள்ளான். ஆனால் அதனை அவன் கடை முதலாளிக்கு கூறவில்லை. தனது மரியாதையைக் காத்த பெயர் தெரியாத மனிதனிடம் இந்தச் சம்பவத்தை பிரதான கதாபாத்திரம் நன்றியுணர்வுடன் கூறுகின்றது. தனது மரியாதையை முன்னர் காத்த பெயர் தெரியாத மனிதனின் மீது பிரதான பாத்திரத்திற்கு மரியாதையும் நன்றியுணர்வும் உள்ளது. ஆனால் பெயர் தெரியாத மனிதனுக்கு அந்தச் சம்பவங்கள் ஒன்றும் நினைவில்லை.
1977 இல் நடைபெற்ற இனவன்முறையால் அனுராதபுர உணவகம் எரியுண்டதையும், அதற்கு முதலே கடை முதலாளி தனது சம்பளப் பணத்தினை கொடுக்காது இழுத்தடித்தைiயும், தான் வேலையை விட்டு விட்டதையும் கதையோடு கதையாக பெயர் தெரியாத மனிதன்; பிரதான பாத்திரத்திற்கு சொல்கின்றான்.
பின்னர், தற்போது எழுவைதீவில் வசிக்கும் பெயர் தெரியாத மனிதன் தான் தொழில் தேடி யாழ்நகரத்துக்கு வந்ததாக கூறுகிறான். பிரதான பாத்திரம் பெயர் தெரியாத மனிதனுக்கு ரூபாய் இருநூயினை வழங்க முயல அவன் அதனை வாங்க மறுக்கிறான்.
ஒப்பீடு
அ. யேசுராசாவின் ‘வரவேற்பு’ என்ற சிறுகதை எழுதப்பட்டு ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளின் பின்னர் வெளியான சிறுகதை பொ. கருணாகரமூர்த்தியின் சிறுகதை ‘பெயர் தெரியான மனிதன்”. இந்த இரண்டு சிறுகதைகளுக்குமடையே
1) சில காலங்களுக்கு முன்னர் கடையில் உணவகங்களில் ;பபரிமாறுபவராக பணியாற்றியவரும் வாடிக்கையாராகவிருந்தவரும் சந்திக்கின்றனர்.
2) வாடிக்கையாளர் உணவக ஊழியரை மதித்தல்
3) ; வாடிக்கையாருக்கு பரிமாறுபவர் மீதான மதிப்பு இருத்தல்
4) இரண்டு கதைகளிலும் பிரதான பாத்திரங்களால் தேநீர்க்கடை ஊழியர்களை மறக்க முடியாதிருத்தல்
போன்ற சில அம்சங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் இந்த இரண்டு சிறுகதைகளும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதையும் வாசகனால் அவதானிக்க முடியும்
வரவேற்பு கதையில்வரும் தேநீர்க்கடை ஊழியன் பிரதான பாத்திரத்திலும் வயது குறைந்தவன். இந்த இருவரும் சில காலங்களுக்கப் பின்னர் சந்திக்கும்போது இருவருக்கும் மற்றையவரை நினைவிருக்கின்றது. ஆனால் பெயர் தெரியாத மனிதனில் வரும் தேநீர்க்கடை ஊழியன் பிரதான பாத்திரத்திலும் வயது கூடியவன். பல வருடங்களக்குப் பின்னர் இருவரும் சந்திக்கும்போது பிரதான பாத்திரத்திற்கு தேநீர்க்கடை ஊழியனை நினைவிருக்கின்றது எனினும் தேநீர்க்கடை ஊழியனுக்கு பிரதான பாத்திரத்தை நினைவில்லை.
வரவேற்பு சிறுகதையில் பிரதான பாத்திரமும் தேநீர்க்கடை ஊழியனும் ஏறத்தாள ஐந்தாறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டுமொரு தேநீர்க்கடையில் சந்திக்கின்றனர். ஆனால் பெயர் தெரியாத மனிதனில் வரும் பிரதான பாத்திரமும் தேநீர்க்கடை ஊழியனும் பத்தாண்டுகளுக்கு கூடுதலான காலப்பகுதியின் பின்னர் வீதியில் சந்திக்கின்றனர்.
இந்த இரண்டு கதைகளிலும் தேநீர்க்கடை ஊழியர்களின் நல்ல பண்புகள் வெளித்தெரிகின்றன. வரவேற்பு சிறுகதையில் தேநீர்க்கடை ஊழியன் பிரதான பாத்திரத்தின் சிற்றுண்டி தேநீர் என்பவற்றிக்கான ‘பில்’லைச் செலுத்துகிறான். ஆனால் மற்றைய கதையில் பிரதான பாத்திரம் உணவு ;; தேநீர், உணவுக்கான செலவை ஏற்கிறது.
வரவேற்பு கதையில் வரும் பிரதான பாத்திரத்திற்கு உணவகங்களில் வேலை செய்யும் மனிதர்கள் மீது இயல்பான அனுதாபம், உணவக ஊழியனின் தோற்றத்திலும் பழக்க வழக்கத்திலும் கொண்டுள்ள பிடிப்பு, இருவரும் ஒரே சமயத்ததை சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட நெருக்ம் என்பவற்றால் இருவருக்குமிடையே இதமான உறவு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் பெயர் தெரியாத மனிதனில் வரும் பிரதான பாத்திரத்திற்கு தனது தவறை முதலாளியிடம் சொல்லிக் கொடுக்காது தனது மானத்தைக் காத்த தேநீர்க கடை ஊழியன் மீது நன்றி கலந்த மதிப்பு உள்ளது.
பெயர் தெரியாத மனிதனில் வரும் ஊழியன் மரியாதை நிமித்தம் பிரதான பாத்திரம் கொடுத்த உபசரிப்பபை ஏற்றுக் கொண்டாலும் தனது சுயமரியாதை காரணமாக பிரதான பாத்திரம் வழங்கும் பணத்தை ஏற்க மறுக்கிறான். வரவேற்பு சிறுகதையில் வரும் பிரதான பாத்திரத்திற்கு கடை ஊழியன் தனது ‘பில்’லை செலுத்தியது ஆச்சரியத்தை அளிக்கிறது. மரியாதை நிமித்தம் பிரதான பாத்திரம் அதனை ஏற்றுக் கொள்கிறது.
நிறைவுரை
ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் எடுத்தாளும் வழமையான கருப்பொருட்களில் இருந்து விலகியுள்ள இந்த இரண்டு சிறுகதைகளும் மனிதர்களுக்கிடையிலான எதிர்பார்ப்பற்ற அன்பை சித்தரிக்கின்றன. வெகு நுண்மையான கருப்பொருளை எடுத்தாளும் இக்கதைகள் சிறந்த கதைகளாக அமைந்துள்ளன. பரிசாரகனுக்கும் வாடிக்கையாளனுக்குமிடையிலான வழமையான தொடர்புகளை விடவும் இவர்கள் இருவருக்குமிடையிலான அன்னியோனியத்தை இக்கதைகள் வெளிக்காட்டுகின்றனவெனலாம். வெகு சீரியாசான விடயங்களை தவிர்ந்த சாதாரண விடயங்களையும் கலைநேர்த்தியுடன் சிறுகதையாக்கலாம் என்;பதற்கு இக்கதைகள் உதாரணமெனலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment